வேளாங்கண்ணியில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற 2 வார சிலுவை பாதை ஊர்வலத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது இந்த பேராலயத்தில் கடந்த 5ம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் துவங்கியது. கிருத்துவர்களின் தவகாலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும் அதன்படி 2 வது வார வெள்ளியை யொட்டி சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இந்த ஊர்வலம் சென்றது. அப்போது ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர். இதில் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.