கோயில் கட்ட நிலம் வழங்கிய இஸ்லாமியர்கள்: நெகிழ்ச்சி வீடியோ

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம் ஒட்டாப்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில் விநாயகர் கோயில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதையடுத்து கோயில் கட்டுவதற்கு பள்ளிவாசலுக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை இஸ்லாமியர்கள் தானமாக வழங்கினார்கள். இன்று (மே 26) நடைபெற்ற குடைமுழுக்கு விழாவில் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இஸ்லாமியர்கள் அடங்கிய குழுவினர் பள்ளிவாசலில் இருந்து சீர்வரிசை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.

நன்றி: News18 Tamil nadu

தொடர்புடைய செய்தி