சாலை விபத்தில் தாய், மகன் பலி

72பார்த்தது
சாலை விபத்தில் தாய், மகன் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரகடம் சாலை சந்திப்பு அருகே ஆலன் என்ற 15 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற பைக் மீது அரசுப் பேருந்து மோதியது. இவ்விபத்தில் சிறுவன் மற்றும் பைக் பின்னால் அமர்ந்திருந்த அவரது தாய் ஜெயஸ்ரீ (32) உயிரிழந்துள்ளனர். இருவரும் மின்சார கட்டணத்தைச் செலுத்திவிட்டு வீடு திரும்புகையில், சாலையைக் கடக்கும்போது இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி