கைதுக்கு பயந்து மாமியார் தற்கொலை முயற்சி

74பார்த்தது
கைதுக்கு பயந்து மாமியார் தற்கொலை முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மாமியார் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டில், புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கைதுக்கு பயந்து மாமியார் செண்பகவல்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், செண்பகவல்லி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுசீந்திரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி