டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தார். அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் ஆவணங்களை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்த அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.