காந்தி அருங்காட்சியக வளாகத்தில் மகா சிவராத்திரி வழிபாடு

1459பார்த்தது
காந்தி அருங்காட்சியக வளாகத்தில் மகா சிவராத்திரி வழிபாடு
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் ஈஷா சார்பில் மகா சிவராத்திரி வழிபாடுகள் சனிக்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணி வரை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. பஞ்சபூத க்ரியாவுடன் தியான பூஜை உள்ளிட்ட சில பூஜைகள் இங்கு நடைபெற உள்ளது. பின்னர், கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி பூஜைகள் அகண்ட திரைகளில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன. வழிபாட்டில் பங்கேற்பவர்களுக்கு ருத்ராட்சம், பிரசாதம் வழங்கப்படும் என ஈஷா மையம் தெரிவித்தது.