உசிலம்பட்டியில் செவிலியர் மாயம்.

65பார்த்தது
உசிலம்பட்டியில் செவிலியர் மாயம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பயிற்சி செவிலியர் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேல வெள்ளை மலைப்பட்டியில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் 17 வயது மகள் நர்சிங் படிப்பு முடித்து உசிலம்பட்டி கவுண்டன்பட்டி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக கடந்த 1 வருடமாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு புறப்பட்டவர் வீட்டிற்கு வரவில்லை.

இதுகுறித்து அவரது தாய் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி