உசிலம்பட்டியில் தேசிய கொடி ஏற்றிய கோட்டாட்சியர்.

63பார்த்தது
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஆர். டி. ஓ. ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றினார். , முன்னதாக உசிலம்பட்டி கிராமிய கலைஞர்கள் மேல தாளம் முழங்க உசிலம்பட்டி கோட்டாச்சியரை அழைத்து வந்து தேசிய கொடியை ஏற்றும் போது உடனிருந்தனர்.
தேசிய கொடி ஏற்றிய பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி