மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பள்ளியில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் தலைமையில் நடந்தது. இதில் தலைமை ஆசிரியர் பரமசிவம் வரவேற்றார்.
பள்ளித்துணை ஆய்வாளர் செல்வம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உடற்கல்வியியல் கல்லுாரி நிறுவனர் வாலந்துார் பாண்டியன், நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
குறுவட்ட பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான தடகள இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.