சிறுவனிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவர் கைது.

54பார்த்தது
சிறுவனிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவர் கைது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் சிறுவனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் படப் பாடி தெருவை சேர்ந்த இளையராஜா மகன் கிஷோர் கண்ணன் (17) என்பவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று இரவு பணத்தை அவர் சம்பள வாங்கிக் கொண்டு திருப்பரங்குன் றம் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது மூன்று வாலிபர்கள் சிறுவனை
வழிமறித்து மது குடிப்பதற்கு பணம் கேட்டு சிறுவனை மிரட்டி உள்ளனர். சிறுவன் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திர மடைந்து அவனை கல்லால் தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கிஷோர் கண்ணன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பரங்குன்றம் சாமியார் பிள்ளை சந்து சிவசூர்யா (20), அவருடைய சகோதரர் வேல்முருகன் (22), திருப்பரங்குன்றம் கூடல் மலை தெரு யோகநாதன் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி