பைக் மீது மாடு மோதிய விபத்தில் ஒருவர் பலி

57பார்த்தது
திருப்பூர் மாவட்டம் ஆட்டையம்பாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் பணி முடிந்து நேற்று (செப்.10) இரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சாலையை கடக்க முயன்ற மாடு ஒன்று, குணசேகரனின் பைக்கின் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி: சாணக்யா

தொடர்புடைய செய்தி