திருமங்கலம்: சாலை விபத்தில் வாலிபர் பலி

73பார்த்தது
திருமங்கலம்: சாலை விபத்தில் வாலிபர் பலி
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே நான்குவழிச் சாலையில் நேற்று முன்தினம் (அக். 4) மாலை சங்கரன் கோவிலைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் அருண்குமார் (23) என்பவர் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் உள்ள மெட்டல் பவுடர் கம்பெனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது பன்றி ஒன்று குறுக்கே வந்தால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளை காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று (அக்.,5) உயிரிழந்தார். இது குறித்து அவருடைய சகோதரர் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி