மதுரை - பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தேவை

72பார்த்தது
மதுரை - பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தேவை
மதுரை - பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தேவை


மதுரை - பெங்களூரு இடையே வந்தேபாரத் அதிவேக ரயில் இயக்க வேண்டும்' என தெற்கு ரயில்வே பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் பத்மநாதன் கூறியதாவது: மதுரை- பெங்களூரு இடையே பயணிகள் அதிக எண்ணிக்கையில் பயணிக்கின்றனர்.

இவர்களுக்கு வந்தே பாரத் ரயில் தற்போது துாத்துக்குடி - மைசூரு மட்டுமே உள்ளது. இது பயணிகளுக்கு போதியதாக இல்லை. முன்பதிவு செய்து காத்திருப்போருக்கு பெரும்பாலும் இட வசதி கிடைக்காமல் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்யும் நிலை ஏற்படுகிறது.

எனவே மதுரை - பெங்களூரு வந்தே பாரத் அதிவேக ரயிலை திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக இயக்க வேண்டும். 2024க்குள் 71 வந்தேபாரத் ரயில்கள் இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 51 ரயில்கள்
மட்டுமே இயக்கப்படுகின்றன. மதுரை- பெங்களூரு இடையே இவ்வகை ரயில் இயக்கினால் பயணிகளிடம் அதிக வரவேற்பு கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி