ஆதிதிராவிட மக்களின் அவலநிலையை கண்டித்து உண்ணாவிரதம்

77பார்த்தது
மதுரை வண்டியூர் தீர்த்தக் காட்டில் ஆதிதிராவிட மக்களின் அவலநிலையை கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம்

மதுரை வண்டியூர் தீர்த்தக்காடு திருமாவளவன் நகரில் ஆதிதிராவிட மொத்தம் 449 குடிமக்கள் குடியிருந்து வருகின்றார். இதில் 308 பேருக்கு மனை பட்டா வழங்கப்பட்டு பின்னர் பட்டா கேன்சல் செய்யப்பட்ட நிலையில் இ- பட்டா என்றால் தூசி பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பல போராட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தினர். ஆனால் மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரச முத்துப்பாண்டியன் தலைமையில் முதன்மை செயலாளர் எ. சி. பாவரசு. மாவட்ட பொருளாளர் முத்தமிழ் பாண்டியன் உள்ளிட்ட விடுதலைசிறுத்தைகள் கட்சியின் பொருப்பாளர்கள் கலந்துகொண்டு தீர்த்தக்காடு பகுதியில் அடிப்படை வசதிகளான
இ-பட்டா, குடிக்க தண்ணீர், மாணவர்களுக்கு படிக்க மின்சாரம் , கழிப்பிடம், தெருவிளக்குகள்,
சாக்கடை வசதி
போன்ற அடிப்படை வசதிகள் வழங்கக்கோரி வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் அதன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி கோஷங்கள் எழுப்பினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி