மதுரை: அரசு பஸ்களில் அருவிபோல் கொட்டும் மழை - வீடியோ

1530பார்த்தது
மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பல நகரப் பேருந்துகளில் மழைக்காலங்களில் பயணிகள் அமரும் இருக்கை மீது குற்றால அருவி போல மழைநீர் கொட்டுகிறது. இதனால், பஸ்களில் பயணிகள், குடையைப் பிடித்துக் கொண்டு அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், பொதுமேலாளர், கோட்ட மேலாளர், கிளை மேலாளர் ஆகியோர்களுக்கு பயணிகள் சார்பில், புகார்கள் தெரிவித்தும், அரசு பஸ்சில் தொடர்கின்ற இந்த அவலத்தை தீர்க்க யாரும் முன் வரவில்லை என, பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனயிலிருந்து, மதுரையிலிருந்து, கருப்பட்டி, குருவித்துறை, நாச்சிகுளம் போன்ற ஊர்களுக்கு இயக்கப்படும் அரசு நகர பேருந்துகளில், மழை பெய்யும்போது அருவி போல இருக்கைகள் மேல் கொட்டுகிறது. இதனால், பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்ய முடியாமல், கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இப்பிரச்சினையை தீர்க்க, சம்பந்தப்பட்ட மதுரை மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் முன்வர வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி