கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள ஜிங்களூர், சலாம் நகரில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி யில் 35 குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப் பாடு நிலவுகிறது. இது குறித்து வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர். தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் கோரிக்கையை மனுவாக எழுதி கலெக்டர் அலவலகத்தில் மனு அளித்தனர்.