அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆலோசனை

84பார்த்தது
அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆலோசனை
கிருஷ்ணகிரி மேற்கு பாகலூர் சாலையில் உள்ள அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 23ஆம் தேதி அன்று ஓசூர் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என பேசப்பட்டது.
மேலும் இது சம்பந்தமாக மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி அவர்கள் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஓசூர் பகுதி கழக செயலாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் ஓசூர் பகுதி கழக செயலாளர்கள் ராஜி, வாசுதேவன் , அசோகர ரெட்டி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், அண்ணா தொழில் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னை கிருஷ்ணன், ஓசூர் மாமன்ற கல்வி குழு தலைவர் ஸ்ரீதரன், ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்கின்ற சங்கர், வட்டக் கழக செயலாளர் செயலாளர்கள் கும்மி என்கின்ற ஹேமகுமார், சந்திரன், சிவக்குமார் , ரகுமான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

தொடர்புடைய செய்தி