மனநலம் பாதிக்கப்பட்டவர் இறந்த நிலையில் மீட்பு

75பார்த்தது
மனநலம் பாதிக்கப்பட்டவர் இறந்த நிலையில் மீட்பு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுக்கா செவக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி மகன் நல்லையன் (79). இவர் கடந்த ஒன்றரை வருடமாக மனநலம் பாதிக்கப்பட்டு அப்பகுதிகளில் திரிந்து வந்துள்ளார். கடந்த 29 ஆம் தேதி காலை 6 மணிக்கு வெளியே சென்ற நல்லையன் வீடு திரும்பவில்லை. அதன் பிறகு செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் பில்லூர் பகுதியில் உள்ள ரங்கசாமி என்பவரின் தரிசுகாடு அருகே இறந்து கிடப்பதாக நல்லையன் மகன் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து அங்கு சென்று பார்த்து நல்லையன் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி