நள்ளிரவில் குல்லா திருடனால் பொதுமக்கள் அச்சம்

2260பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் அருகே உள்ள பாலாஜி நகரில் கடந்த 23ஆம் தேதி அன்று நள்ளிரவில் கதவு திறந்திருந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை தாண்டி சென்று 2 செல்போன்கள், மரப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். அதேபோல் மற்றொரு வீட்டில் உள் தாழ்ப்பாள் போட்ட கதவின் அருகே கண்ணாடியை உடைத்து தாழ்ப்பாளை திறந்து உள்ளே சென்று பொருட்கள் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்தநிலையில் மீண்டும் அதே மாடி வீட்டில் நேற்று நள்ளிரவு கதவைத் தட்டியுள்ளனர். சுதாரித்த நாகராஜன் தம்பதியினர் கதவை திறக்காமல் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது தலையில் குல்லா அணிந்த நபர் டார்ச் லைட் அடித்துக் கொண்டு அங்கிருந்து கீழே இறங்கி சென்றுள்ளார். பிறகு கருப்பண்ணன் ஆசிரியர் குடியிருந்த கீழ் வீட்டில் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் தேடி விட்டு பொருட்களை ஏதும் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதனை அடுத்து அங்கு வந்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை பாலாஜி நகரில் இரண்டாவது முறையாக திருட்டு சம்பவம் அரங்கேறியதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி