புலியூரில் மே தின கொடியேற்று விழா

84பார்த்தது
கரூர் புலியூர் பகுதி கரூர் மாவட்ட அண்ணா மினி டெம்போ ஓட்டுனர்கள் சங்கத்தின் பெயர் பலகை திறக்க விழா மற்றும் மே தின கொடியேற்று விழா கிளை தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

சிஐடியு கரூர் மாவட்ட தலைவர் ஜி. ஜீவானந்தன் கலந்துகொண்டு சங்க கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, சி ஐ டி யு கரூர் மாவட்ட செயலாளர் முருகேசன், கரூர் மாநகராட்சி சிபிஎம் மாமன்ற உறுப்பினர் தண்டபாணி, கரூர் மாவட்ட துணை தலைவர்கள் சுப்பிரமணி, க. கந்தசாமி, கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர் ராஜீவ் காந்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சிவா, தலைவர் சதீஷ், கரூர் மாவட்ட அண்ணா மினி டெம்போ ஓட்டுனர்கள் சங்க துணைத் தலைவர் சரவணன், இணைச் செயலாளர் பிரபாகரன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் பாலுசாமி கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி