![](https://media.getlokalapp.com/cache/ce/0c/ce0c24d7a819f7786c03903d469ce440.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
திருமணம் செய்வதாககூறி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது.
கரூரில் பெண்ணை திருமணம் செய்வது செய்து கொள்வதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது. கரூர் மாவட்டம், காருடையான் பாளையம் அருகே உள்ள வால்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் மகன் மாரிமுத்து வயது 30. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் 24 வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கரூர்- கோவை சாலையில் உள்ள ஒரு அலுவலகத்தில் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாரிமுத்து மறுத்து, பெண்ணிடம் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மாரிமுத்துவை கைது செய்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர்.