கரூர் - Karur

திருமணம் செய்வதாககூறி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது.

கரூரில் பெண்ணை திருமணம் செய்வது செய்து கொள்வதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது. கரூர் மாவட்டம், காருடையான் பாளையம் அருகே உள்ள வால்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் மகன் மாரிமுத்து வயது 30. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் 24 வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கரூர்- கோவை சாலையில் உள்ள ஒரு அலுவலகத்தில் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாரிமுத்து மறுத்து, பெண்ணிடம் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மாரிமுத்துவை கைது செய்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர்.

வீடியோஸ்


கரூர்
Jul 11, 2024, 15:07 IST/அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி

டூவீலர் மீது ஆம்னி வேன் மோதி விபத்து. இருவர் படுகாயம்.

Jul 11, 2024, 15:07 IST
நத்தமேடு பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது ஆம்னி வேன் மோதி விபத்து. இருவர் படுகாயம். ஈரோடு மாவட்டம், காசிபாளையம், வெங்கம்பூர், மேற்கு தெருவை சேர்ந்தவர் அலாவுதீன் மகன் அப்துல் வாசித். வயது 21. இவரது நண்பர் ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் அருகே உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வெங்கடேஷ் வயது 21. இவர்கள் இருவரும் டூ வீலரில், ஜூலை 8-ம் தேதி மாலை 4: 30 மணியளவில், ஈரோடு - கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, நத்தமேடு பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, அதே சாலையில் எதிர் திசையில், ஈரோடு மாவட்டம், சிவகிரி கோட்டை புதூர் பகுதியைச் சேர்ந்த திவாகர் வயது 22 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ஆம்னி வேன், அப்துல் பாசித் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வாசித் மற்றும் வெங்கடேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், ஈரோட்டில் உள்ள அப்பாச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் வாசித் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக ஆம்னி வேனை கவனக்குறைவாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய திவாகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.