அருள்மிகு அன்ன காமாட்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா.

58பார்த்தது
கரூரில், அருள்மிகு அன்ன காமாட்சி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வடக்கு பிரதட்சன சாலையில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு விநாயகர், அருள்மிகு அன்ன காமாட்சி அம்மன், அருள்மிகு மதுரை வீரன் கோவில் புனரமைக்கப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஜூலை ஏழாம் தேதி துவங்கி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், இன்று அதிகாலை நான்காம் கால பூஜை நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று, கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அன்ன காமாட்சி அம்மனுக்கு மகா தீபாரணை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவில் சிறப்பித்தனர்.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விழா கமிட்டியின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி