கரூர் - Karur

டிட்டோஜாக்- கருப்பு பட்டை அணிந்து 2வது நாள் ஆர்ப்பாட்டம்.

கரூரில் டிட்டோஜாக் சார்பில் கருப்பு பட்டை அணிந்து இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமையில் அரசாணை 243ஐ முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் நகரச் செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் TNPTF பெஞ்சமின் சகாயராஜ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரிய கூட்டணி நகர துணைத் தலைவர் மோகன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நகரத் தலைவர் தமிழரசி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொடக்கப்பள்ளி இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, மாநில முன்னுரிமை கூறுகின்ற அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு நீதிமன்ற வழக்கு முடிந்த பின்பு புது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். 12. 10. 2023 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் மீது அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


கரூர்
Jul 09, 2024, 12:07 IST/கரூர்
கரூர்

டிட்டோஜாக்- கருப்பு பட்டை அணிந்து 2வது நாள் ஆர்ப்பாட்டம்.

Jul 09, 2024, 12:07 IST
கரூரில் டிட்டோஜாக் சார்பில் கருப்பு பட்டை அணிந்து இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமையில் அரசாணை 243ஐ முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் நகரச் செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் TNPTF பெஞ்சமின் சகாயராஜ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரிய கூட்டணி நகர துணைத் தலைவர் மோகன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நகரத் தலைவர் தமிழரசி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொடக்கப்பள்ளி இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, மாநில முன்னுரிமை கூறுகின்ற அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு நீதிமன்ற வழக்கு முடிந்த பின்பு புது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். 12. 10. 2023 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் மீது அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.