கரூர் - Karur

பள்ளப்பட்டி நகராட்சி- சீர்கேடுகளை சீரமைக்க ஆட்சியரிடம் மனு.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள சீர்கேடுகளை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் பள்ளப்பட்டி நகராட்சி செயல்பட்டு வருகிறது. பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமலும், நகராட்சி பகுதிகளில் திரியும் நாய்களை கட்டுப்படுத்தாமலும் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைவு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் தலைமையில் கட்சியினர் மாவட்ட ஆட்சியிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். இது தொடர்பாக செய்தியாளரிடம் தெரிவித்த வழக்கறிஞர் நன்மாறன், பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் திரியும் தெரு நாய்களால் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணாக்கர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், முறையாக குடிநீர் வரி செலுத்தியும் கூட, சீரான குடிநீர் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகவும், எனவே அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சீரான குடிநீர் வழங்க கோரியும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள மின் கம்பங்களை மாற்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியதாக தெரிவித்தார்.

வீடியோஸ்


கரூர்
Jul 15, 2024, 12:07 IST/கரூர்
கரூர்

பள்ளப்பட்டி நகராட்சி- சீர்கேடுகளை சீரமைக்க ஆட்சியரிடம் மனு.

Jul 15, 2024, 12:07 IST
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள சீர்கேடுகளை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் பள்ளப்பட்டி நகராட்சி செயல்பட்டு வருகிறது. பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமலும், நகராட்சி பகுதிகளில் திரியும் நாய்களை கட்டுப்படுத்தாமலும் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைவு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் தலைமையில் கட்சியினர் மாவட்ட ஆட்சியிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். இது தொடர்பாக செய்தியாளரிடம் தெரிவித்த வழக்கறிஞர் நன்மாறன், பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் திரியும் தெரு நாய்களால் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணாக்கர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், முறையாக குடிநீர் வரி செலுத்தியும் கூட, சீரான குடிநீர் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகவும், எனவே அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சீரான குடிநீர் வழங்க கோரியும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள மின் கம்பங்களை மாற்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியதாக தெரிவித்தார்.