கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, மூலிமங்கலம் அருகே உள்ள புதுகுறுக்கு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் மனோஜ் குமார் (27). இவர் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 9: 45- மணியளவில், தளவாய்பாளையம் என் எஸ் மஹால் அருகே, அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிர் திசையில் TN34 E. 8662 என்ற எண் கொண்ட மற்றொரு டூவீலரில் வேகமாக வந்த நபர், மனோஜ் குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மனோஜ் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள செந்தில்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த மனோஜ் குமார் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 24ஆம் தேதி இரவு 7 மணி அளவில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்த மனோஜ் குமாரின் தந்தை ரவிச்சந்திரன் என்பவர், வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பெயரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த மனோஜ் குமார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.