இந்தியாவின் அண்டை நாட்டை அச்சுறுத்தும் நோய்

65பார்த்தது
இந்தியாவின் அண்டை நாட்டை அச்சுறுத்தும் நோய்
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் 9 பேர் மலேரியா நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் மருத்துவ நிபுணர் புபுது சூலசிறி தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, “ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்துவிட்டு திரும்பியவர்களில் இருந்து தான் அதிக எண்ணிக்கையில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்” என்றார். முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கையை மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியது.

தொடர்புடைய செய்தி