விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம்

73பார்த்தது
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று கரூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செம்மார்ந்த வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் (எ) ஆற்றலரசு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி மண்டல துணை செயலாளர் க. பெரியசாமி, தாந்தோனி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபு, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி என்கிற வன்னியரசு, குளித்தலை நகர செயலாளர் பிரகாஷ், குளித்தலை ஒன்றிய துணை செயலாளர் மகாலிங்கம், நங்கவரம் பேரூர் பொருளாளர் பழனிவேல், ஜெகதாபி மணிவேல், வினோத், பால்மார்பட்டி காளிமுத்து, ஜெகதாபி காளிதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி