கல்லுமடை அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து.

53பார்த்தது
கல்லுமடை அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், மணவாடி, சின்னம்ம நாயக்கன்பட்டி, ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் வயது 51.

இவர் ஜூலை மூன்றாம் தேதி மதியம் 12 மணியளவில், கரூர் - திண்டுக்கல் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது டூவீலர் கல்லுமடை, அரசி கார்டன் அருகே சென்று கொண்டிருந்தபோது,

அதே சாலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் வயது 30 என்பவர், வேகமாக ஓட்டி வந்த கார், சேகர் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக சேகர் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிவராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி