தர்ப்பணம் கொடுக்க திருச்சியில் குவிந்த பொதுமக்கள்.!

73பார்த்தது
தர்ப்பணம் கொடுக்க திருச்சியில் குவிந்த பொதுமக்கள்.!
புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை ஆகிய இடங்களில் மக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பாயும் புண்ணிய நதிகளில் ஒன்றான காவிரியில் தர்ப்பணம் கொடுப்பதற்காக தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதலே திருச்சியில் குவிந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி