கொளுத்தும் வெயிலில் அமரவைக்கப்பட்ட மாணவர்கள்

54பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம், சித்தார்த்நகரில் அமைந்துள்ள ஷியாம்ராஜி உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கட்டணம் கட்டாமல் நிலுவையில் வைத்திருந்ததால், அவர்களை அப்பள்ளியின் முதல்வர் கொளுத்தும் வெயிலில் அமர்த்தியுள்ளார். இது தொடர்பாக அம்மாவட்ட ஆய்வாளர் கவனத்திற்கு சென்றது. இது குறித்து தெரிவித்த அவர், “ இப்படி செய்வது மிகவும் வெட்கக்கேடானது. இது குறித்த தகுந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி