விசிக மது ஒழிப்பு மாநாடு.. கலாய்த்த ஜெயக்குமார்

61பார்த்தது
விசிக மது ஒழிப்பு மாநாடு.. கலாய்த்த ஜெயக்குமார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (அக். 2) உளுந்தூர்பேட்டையில், திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்துகொள்வது என்பது, ‘ஜீவகாருண்யம் மாநாட்டில் கசாப்புக்கடைகாரன் கலந்துகொள்வது’ போல தான் உள்ளது. காந்தி ஜெயந்தி நாளில் கூட கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக சிலரை கைது செய்துள்ளனர். இது தான் தற்போதைய நிலை” என்றார்.

தொடர்புடைய செய்தி