பணம் வைத்து சூதாடிய 5- பேர் கைது. ரூபாய் 2, 800-பறிமுதல்.

51பார்த்தது
அரவக்குறிச்சி அருகே முள்தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 5- பேர் கைது. ரூபாய் 2, 800- பறிமுதல்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் ஜூலை 15ஆம் தேதி இரவு 9: 30 மணி அளவில், அருகில் உள்ள பச்சைப்பள்ளி பாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது.


இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், புதாம்பூர் அருகே உள்ள வடுகப்பட்டியைச் சேர்ந்த துரைமுருகன், நல்லுசாமி, பாகனத்தம் அருகே உள்ள ஊத்துக்கரை பட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், புதாம்பூரைச் சேர்ந்த சிவக்குமார், புதாம்பூர் சமத்துவ புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 2800-யும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

தொடர்புடைய செய்தி