எம். பி தலைமையில் முற்றுகை போராட்டம்

55பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன், இவர் திருவட்டார் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவரது மனைவி உஷா ராணி, திருவட்டார் பேரூராட்சி 10- வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலாராகவும் உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு ஜாக்சன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து ஜாக்சன் அருகில் உள்ள தேவாலயம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு இரண்டு பைக்கில் வந்த பிரபல ரவுடி ராஜ்குமார் தலைமையிலான 6- பேர் கும்பல் ஜாக்சனை வெட்டி சாய்த்து உள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஜாக்சனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் திருவட்டார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பிரபல ரவுடி ராஜ்குமார் உட்பட ஆறு பேர் கொண்ட கும்பலை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி