தளியல் முத்தாரம்மன் கோவில் கொடை விழா உச்சக்கொடையுடன் நிறைவு

84பார்த்தது
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுடன் தொடர்பு உள்ள பிரசித்தி பெற்ற தளியல் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா கடந்த ஏப்ரல் 20. ந்தேதி துவங்கியது.

கோவில் தெரு, காங்கரை பகுதிகளில் பவனி வருதல், வில்லிசை, உச்சபடைப்பு ஆகியன நடந்தது.
நேற்று ஆதிகேசவப்பெருமாள் கோவில் எதிர்புற திற்பாதத்து கடவிலிருந்து பூநீர் எடுத்து வருதல், பூநீர் திரும்பி வருதல் , இரவு 8. 30 மணிக்கு குத்தியோட்டம், பூமாலை, பிடிப்பணம் முதலான நேர்ச்சை வழிபாடுகள், இரவு தேவன் ஊர்வலம், வாணவேடிக்கை, ஒடுக்கு பூஜை ஆகியன நடந்தது.
ஒடுக்கு பூஜையில் உணவு தயாரிப்பதற்கான அரிசிக்குரிய நெல் அன்று காலையில் அவிக்கப்பட்டு பகலில் உலர்த்தி மாலையில் குத்தி இரவு உணவு சமைக்கட்டது. அவ்வாறு சமைக்கப்பட்ட உணவு வகைகள் கோயிலுக்கு கொண்டு வரும்போது தளியல் தெரு முதல் கோயில் வளாகம் முழுவதும் உள்ள விளக்குகள், வீடுகளில் உள்ள விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. அப்போது ஊரே நிசப்தமாக இருந்தது.
5. ம் நாளான இன்று உஷபூஜை, காலைதீபாராதனை, மதியம் 1 மணிக்கு உச்சக்கொடை, தீபாராதனை, வில்லிசை, வாழ்த்துப்பாடி தீபாராதனை ஆகியவற்றுடன் விழா நிறைவடைந்தது.

விழா ஏற்பாடுகளை தளியல் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் அறக்கட்டளை னர். நிர்வாகக்குழுவினர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்

தொடர்புடைய செய்தி