சனாதனம் மின்னிக்கொண்டே இருக்கும்

81பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள பெரிஞ்சகோணம் சக்தி விநாயகர், தேவி புவனேஸ்வரி, நாகராஜா திருக்கோயில் 42வது திருவிழா இரண்டாம் தேதி துவங்கி நாளை வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் நேற்று நடைபெற்ற இந்து சமய மாநாட்டில் பேசிய பாஜக மாவட்ட கல்வியாளர் பிரிவு துணைத் தலைவர் டாக்டர் சக்தி பிரசாத் லட்சக்கணக்கானோரை இழந்து ராமஜென்ம பூமி ராமர் ஆலயம் அமைத்திருக்கிறோம். பல்வேறு இழப்புக்களையும் தாக்குதல்களையும் சந்தித்து சனாதனம் இன்று நிலைத்து வந்த நிற்கிறது. மற்றவர்கள் சனாதானத்தை தாக்க தாக்க வைரம் உரச, உரச எப்படி மின்னிக் கொண்டே இருக்குமோ அது போல் சனாதனமும் மின்னிக் கொண்டே இருக்கும் என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி