களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு.

73பார்த்தது
களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு.
ஆடி மாத முதல் வெள்ளிகிழமையான நேற்று நாகர்கோவில் களியங்காட்டில் உள்ள சிவன் கோவிலில் அமைந்துள்ள துர்கை அம்மன் சன்னிதியில் ராகுகாலதுர்கா பூஜை மற்றும் பிதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காலை 10. 30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சிறப்பு பரிகார பூஜை, வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, முக்கிய நிகழ்ச் சியான 101 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து துர்கை அம்மனை வழிபட்டனர். அதைதொடர்ந்து சிவனுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் தீபாராதனை நடந்தது. மதியம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5. 30 மணிக்கு சிவனுக்கும் நந்தி தேவர்க்கும் அனைத்து வகை அபிஷேகங்கள், 6. 30 மணிக்கு அலங்காரம், பிரதோஷ தீபாராதனை, 6. 40 மணிக்கு அனைத்து சாமிகளுக்கும் தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சின்னையன், செயலாளர் ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி