குமரி ஸ்ட்ராங்மேன் மாணவ மாணவியர்களுக்கு மத்தியில்  பயிற்சி

71பார்த்தது
ஸ்பெயினில் நடைபெறும் 2024ம் அர்னால்டு உலக ஸ்ட்ராங் மேன் போட்டிக்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த இரும்பு மனிதன் கண்ணன் என்பவர் தேர்வாகியுள்ளார். அவர் போட்டிக்கு தயாராகும் வகையில் இன்று நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் வைத்து கல்லூரி மாணவ மாணவிகள் முன்னிலையில் 90 கிலோ எடையை 60 செகண்டில் 10 முறை தூக்கியும், ஒரு கைக்கு 100 கிலோ விதம் இரண்டு கைகளில் 40 மீட்டர் தூக்கி வாக் செய்தும், 320 கிலோ எடையுள்ள ஜேசிபி டயரை 20 மீட்டர் தூக்கி நகர்த்தியும், 170கிலோ எடையுள்ள வெயிட்டை ஒரு நிமிடம் தூக்கியும் பயிற்சி மேற்கொண்டார்.
இப்பயிற்சியின் நோக்கம் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது, இளைஞர்கள் போதை பழக்கங்களிலிருந்து தங்களை காத்து உடலை ஆரோக்கியமாக வைப்பது குறித்து விழிப்புணர்வுக்காக கல்லூரி மாணவர்கள் மத்தியில் பயிற்சி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இரும்பு மனிதன் போட்டியில் வெற்றி பெற கண்ணனுக்கு, கல்லூரி மாணவ மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி