குமரியில் விழிப்புணர்வு வாகன பிராச்சாரம்.

555பார்த்தது
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி  கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிராச்சாரத்தினை  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணியம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்பையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா. ஜாண் ஜெகத் பிரைட், தேர்தல் வட்டாட்சியர் வினோத், உசூர் மேலாளர் ஜுலியன் தாஸ், துணை தேர்தல் வட்டாட்சியர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி