மரியா மருத்துவ கல்லூரிகள் குழுமம் சார்பில் யோகா பேரணி

70பார்த்தது
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று ஆற்றூர் மரியா மருத்துவ கல்வி குழுமம் சார்பில்  யோகா விழிப்புணர்வு பேரணி நடந்தது.   திருவட்டார் போலீஸ் ஸ்டேஷன் முன்பிருந்து பேரணி துவங்கியது. திருவட்டார் போலீஸ்  இன்ஸ்பெக்டர் சீதாலெஷ்மி பேரணியை துவங்கி வைத்தார்.
திருவட்டார் காங்கரையில் துவங்கிய பேரணி, பஸ் ஸ்டாண்ட், மீன் சந்தை, பாலம், கழுவன் திட்டை வழியாக ஆற்றூர் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியை அடைந்தது. பேரணியில் ஆற்றூர் மரியா ஆயுர்வேத, சித்தா, பிசியோதெரபி, ஹோமியோ, நர்சிங், அலைட் ஹெல்த் சயன்சஸ் மற்றும்  ஆவே மரியா நர்சிங் கல்லூரி இயக்குநர்கள், முதல்வர்கள் , பேராசிரியர்கள், மாணவ மாணவியர் யோகா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து அனைத்து மருத்துவக்கல்லூரிகளின் சார்பாக யோக பயிற்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பின்னர் நடந்த கருத்தரங்கிற்கு மரியா மருத்துவக் கல்லூரி குழும தாளாளர் டாக்டர் ஜி. ரசல்ராஜ் தலைமை தாங்கினார். டாக்டர்கள் ஈஸ்வரன், மனோஜ், சுஜின் ஹெர்பர்ட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் யோகா சிறப்பு ரங்கோலி போட்டி, முக ஓவிய போட்டி மற்றும் நடன போட்டிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை மரியா கல்லூரி குழுமத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி