குளச்சலில் ஆட்டோவுடன் மாயமான டிரைவர்; மனைவி போலீசில் புகார்

73பார்த்தது
குளச்சலில் ஆட்டோவுடன் மாயமான டிரைவர்; மனைவி போலீசில் புகார்
திங்கள்நகர் அருகே திருவிதாங்கோடு பகுதி  புதுப்பள்ளி தெருவை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் (42) இவர் வாடகைக்கு ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது மனைவி சபீனா. இந்த தம்பதியினர் தற்போது குளச்சல், எம்ஜிஆர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

       சம்பவ தினம் சையது இப்ராஹிம் தான் ஓட்டி வரும் ஆட்டோவை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க போவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் சையது இப்ராஹிம் நீண்ட நேரம் ஆகியும்  வீட்டிற்கு திரும்பி வரவில்லை. ஆட்டோ உரிமையாளர் வீட்டிற்கு சென்றதாகவும் தெரியவில்லை.

     இதனால் பதட்டமடைந்த சபீனா தனது கணவரை பல இடங்களில் தேடினார். ஆனால் சையது இப்ராஹிம் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் ஆட்டோவுடன் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து சபீனா குளச்சல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சையது இப்ராஹீமை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி