குமரி வந்த ரயில்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸ் சோதனை

71பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வட மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி வரப்படுகிறது. இதனை தடுக்க நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் குமரி மாவட்ட போதை பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா மற்றும் மத்திய ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ் சந்த் மீனா தலைமையில் இன்று (16-ம் தேதி) திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தப்பட்டது. அதிலிருந்த பயணிகள் உடைமைகள் மற்றும் ஒவ்வொரு பெட்டிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. மேலும் ரயில் நிலைய பிளாட்பாரங்கள் அங்கிருந்து பார்சல்கள் ஆகியவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி