அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து.. 2 பேர் பலி

55பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே இன்று (செப்.16) கார் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். அரசுப் பேருந்து மோதியதில் கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்த பெண் பலியானார். காரில் இருந்த மற்றொரு பெண் மற்றும் குழந்தைக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அரசுப் பேருந்தின் டயர் வெடித்ததால் விபத்து நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

நன்றி: News Tamil 24*7

தொடர்புடைய செய்தி