சாலவாக்கம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு.

539பார்த்தது
காஞ்சிபுரம் பாராளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் இன்று உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி சாலவாக்கம் ஒன்றியத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையிலும், சாலவாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் குமார், சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியா சக்திவேல் ஆகியோர் முன்னிலையிலும், ஒழையூர், ரெட்டமங்களம், ஆலஞ்சேரி, குன்னவாக்கம் உட்பட 20 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருக்கு திமுகவினர் ஆளுயர மாலை அணிவித்தும், ஜேசிபி இயந்திரம் மூலம் பூக்களை தூவியும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தோட்டநாவல் ஊராட்சி மன்ற தலைவர் ஆலஞ்சேரி ஆமுதா தமிழ்வேந்தன், ஒழையூர் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, ரெட்டமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ஜெயராமன், ஊராட்சி செயலாளர் பூபாலன், குன்னவாக்கம் ஊராட்சி மன்ற திமுக நிர்வாகிகள் வெங்கடேசன், யோகராஜ் ஆகியோர் வேட்பாளர் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒகையூர் ஜெயவிஷ்னு, எடமச்சி முரளி உட்ப ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி