சேதமடைந்த மணித்தோட்டம் நிழற்குடை

62பார்த்தது
சேதமடைந்த மணித்தோட்டம் நிழற்குடை
உத்திரமேரூர் -- எண்டத்துார் சாலையில், மணித்தோட்டம் கிராமம் உள்ளது.

இக்கிராம பேருந்து நிறுத்தத்தில், பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்திய பயணியர் நிழற்குடை, பழுதடைந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில், நிழற்குடை கட்டடத்திற்குள் அதிகமான மழைநீர் சொட்டுகிறது.

இதனால், அப்பகுதி மாணவ - மாணவியர் மற்றும் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் நிழற்குடை இருந்தும், பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.

எனவே, மணித்தோட்டம் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை கட்டடம், புதிதாக ஏற்படுத்தி தர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி