உத்திரமேரூர் -- எண்டத்துார் சாலையில், மணித்தோட்டம் கிராமம் உள்ளது.
இக்கிராம பேருந்து நிறுத்தத்தில், பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்திய பயணியர் நிழற்குடை, பழுதடைந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில், நிழற்குடை கட்டடத்திற்குள் அதிகமான மழைநீர் சொட்டுகிறது.
இதனால், அப்பகுதி மாணவ - மாணவியர் மற்றும் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் நிழற்குடை இருந்தும், பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, மணித்தோட்டம் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை கட்டடம், புதிதாக ஏற்படுத்தி தர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.