சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நடைமேடையில் இருந்து இறங்கி, ரயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும்போது கீழே தள்ளி பெண் காவலரை நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சத்தியபாலு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.