மின்சார வாரியம் மெத்தனம் விபத்தை தடுக்குமா.

77பார்த்தது
உத்திரமேரூர் அருகே கை எட்டிப் பிடிக்கும் தொலைவில் தாழ்வாக தொங்கும் மின்சார ஒயர்களை சரி செய்ய மின் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கெங்கை அம்மன் கோவில் தெரு பின்புறம் வயல்வெளி பகுதியில் மின் கம்பங்களில் உள்ள மின்சார ஒயர்கள் கை எட்டி பிடிக்கும் தூரத்தில் மிகவும் தாழ்வாக தொங்கிக்கொண்டு உள்ளது.

அப்பகுதியில் தினமும் பொதுமக்கள் இயற்கை உபாதைகள் கழிக்க சென்று வருகின்றனர். மேலும், கால்நடைகளும் மேச்சலுக்காக செல்கிறது.

அங்கே, தாழ்வாகத் தொங்கும் மின்சார ஒயர்களால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, அப்பகுதியில் மின்சார ஒயர்களால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்னர் தாழ்வாக தொங்கும் மின் ஒயர்களை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி