டெல்லி துவாரகா பகுதியில் தனது 10 மற்றும் 8 வயது மகன்களுடன் வாழ்ந்து வந்தவர் 30 வயது பெண். இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்சிங் (28) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அந்த பெண்ணின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சஞ்சய்சிங், கழுத்தை நெரித்து மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்தார்.