வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி...!

61பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தண்டலம் பகுதியில் புதிதாக புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில், சென்னை குன்றத்தூரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீட்டுக்கு அனுப்புரம் நோக்கி வேன் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென வேனின் பின் பக்க சக்கரம் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய வேன் சாலையில், பல்டி அடித்து குப்புறக்கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணித்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பத்துக்கும் மேற்பட்டோர் படுங்காயம் அடைந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி