செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்கள், தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய செயல் அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் இருந்தனர்.