112 பேரை காவு வாங்கிய நேபாள பெருவெள்ளம்

70பார்த்தது
நேபாளத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 79 பேரைக் காணவில்லை. மீட்புப் பணிகளில் 3,000 பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பெருவெள்ளத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கியுள்ளன. பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி